சுவிட்சர்லாந்தில் மனைவியை வெறித்தனமாக கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள பிரிபர்க் என்ற இடத்தில், 47 வயதுள்ள கணவன் 40 வயதுள்ள தந்து மனைவியுடனும், இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான்.
சுவிட்சர்லாந்தில் உள்ள பிரிபர்க் என்ற இடத்தில், 47 வயதுள்ள கணவன் 40 வயதுள்ள தந்து மனைவியுடனும், இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான்.
அவன் தனது வேலையை இழந்தவுடன் குடிக்கி அடிமையாகி மன அமைதியை இழந்து, தனது மனைவியிடம் வாக்குவாதங்களிலும், சண்டைகளிலும் ஈடுபட்டு, தந்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, சித்திரவதை செய்து அடித்து துன்புறுத்தியுள்ளான்.
ஒரு நாள் வெறிபிடித்தவன் போல் மனைவியிடம் சண்டைபோட்டு விட்டு, மனைவியை தனது கைகளாலேயே கழுத்தை நெறித்து, கத்தியால் குத்தியும், வேட்டை துப்பாக்கியால் சுட்டும் கொன்றுள்ளான்.
சிறிது நேரத்திற்கு பிறகு, இரண்டு பெண் குழந்தைகளும், இவனிடம் அம்மா எங்கே என்று கேட்ட பொழுது, வேளியே வேலையாக சென்று இருப்பதாக கூறிவிட்டான்.
தனது அறையிலேயே, மனைவியின் பிணத்தை வைத்துப் பூட்டி விட்டு, குழந்தைகளுக்கு தெரியாமல் ஒரு நாள் முழுவதும் மறைத்துவிட்டான்.
மறுநாள் அவனது மனசாட்சி குத்தவே, அவனே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து, பொலிஸ் அதிகாரியிடம், ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தவுடன் நீதிமன்றம் அவனுக்கு 15 வருடங்கள் கடுங்காவல் தண்டனையை அளித்தது.
தற்போது அவன் 4 வருடங்களாக சிறையிலேயே உள்ளான். அவனது இரண்டு பெண் குழந்தைகளும் அனாதை ஆசிரமத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இவருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனையைத் தீர்ப்பாக அளித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக