சுவிசில் ஸ்பீட் கமெரா தகவல்களை பேஸ்புக்கில் வெளியிட்ட பெண் ஒருவருக்கு 1000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து சிக்னலும், நகரத்தின் போக்குவரத்து சாலைகளிலும், சாலை விதிகளை மீறி அதிவேகத்தில் செல்லுவோரை கண்காணிக்கும் ஸ்பீட் கமெராக்களை போக்குவரத்து துறையினர் பொருத்தியுள்ளனர்.
சுவிஸ் நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து சிக்னலும், நகரத்தின் போக்குவரத்து சாலைகளிலும், சாலை விதிகளை மீறி அதிவேகத்தில் செல்லுவோரை கண்காணிக்கும் ஸ்பீட் கமெராக்களை போக்குவரத்து துறையினர் பொருத்தியுள்ளனர்.
இந்த கமெராக்கள் நகரின் எந்தெந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது என பிரபல சமூக வலைத்தளமான “பேஸ்புக்கில்” வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், 2013ம் ஆண்டு சட்டத்தின் படி இந்த முக்கிய தகவல்களை அனுமதியின்றி வெளியிடுவது குற்றமாகும்.
இதற்கு போக்குவரத்து துறையும் நெடுஞ்சாலைத்துறையும் அனுமதி அளிக்க வேண்டும்.
அவ்வாறு அனுமதி இல்லாது சமூக வலைத்தளங்களில் இத்தகவல்களை வெளியிடுவது குற்றமாகும்.
எனவே இக்குற்றத்தை செய்த பெண்ணுக்கு 1000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் இதேபோல் சமூக வலைத்தளங்களில் அனுமதியின்றி பிரசுரிக்கும் நபர்களை தாங்கள் ஸ்கேன் செய்து வருவதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக