சுவிசில் போக்குவரத்து நெரிசலால் ஓட்டுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிஸ் மத்திய அரசின் நெடுஞ்சாலை அலுவலகம் நேற்று முன் தினம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், போக்குவரத்து நெரிசலால் நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களின் மூலம், சுமார் 26 பில்லியன் கிலோ மீற்றர்கள் கூடுதலாக பயணிக்க வேண்டிய நிர்பந்ததில் உள்ளனர்.
சுவிஸ் மத்திய அரசின் நெடுஞ்சாலை அலுவலகம் நேற்று முன் தினம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், போக்குவரத்து நெரிசலால் நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களின் மூலம், சுமார் 26 பில்லியன் கிலோ மீற்றர்கள் கூடுதலாக பயணிக்க வேண்டிய நிர்பந்ததில் உள்ளனர்.
இதனால் கடந்த 2012ம் ஆண்டில் 1.7 சதவீதமாய் இருந்த போக்குவரத்து நெரிசல், கடந்தாண்டில் 3.7 சதவீதமாக அதிகரித்து நெடுஞ்சாலை பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் நெடுஞ்சாலை வாகன ஓட்டுநர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை போக்குவரத்திலேயே செலவிடும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இப்பிரச்சையை சமாளிப்பதற்காக ஜெனிவா விமானநிலையத்திலிருந்து வெர்கான் பகுதி வரையிலும் நெடுஞ்சாலை போக்குவரத்து பணிகள் தொடங்கப்படவுள்ளது.
இதனைதொடர்ந்து இந்த பணிகள் லுசெனிலுள்ள கிரைசியர், சூரிச்சிலுள்ள வின்டர்து மற்றும் லுட்டர்பீச் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக