வெள்ளி, 6 ஜூன், 2014

"பளார்" கொடுத்த கணவர்: 3 ஆண்டு சிறை

 சுவிசில் பெண் ஒருவரது கன்னத்தில் அவரது கணவர் பலமாக அறைந்ததால் அவர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளார்.
சுவிசின் லென்ஸ்பெர்க் (Lenzburg) மாகாணத்தில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தம்பதியர் ஒருவர் வசித்து வந்தனர்.
கடந்த 2008ம் ஆண்டு மனைவியை கணவன் கடுமையாக தாக்கியதுடன், அவளது கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளான்.
இதில் கேட்கும் திறனை இழந்த அவரது மனைவி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின் கடந்த 2011ம் ஆண்டு யூலை மாதம் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் வெறும் தற்செயலாக நடந்தது என இவ்வழக்கை லென்ஸ்பர்க் நீதிமன்றம் நிறைவு செய்திருந்தது.
ஆனால் அப்பெண்ணின் மரணம் குறித்து கதறி அழும் அவளது பெற்றோர், தங்கள் மகளின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் .
இதனையடுத்து மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், அந்த பெண்ணின் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக