ஞாயிறு, 29 ஜூன், 2014

திக்கித் திணறப் போகும் மக்கள் கோடைகாலத்தில்

 சுவிட்சர்லாந்தில் கோடை கால விடுமுறையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
சுவிஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோடை காலத்தை முன்னிட்டு பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை தொடங்கவுள்ளது. இதனை அடுத்து ஜெனிவா மற்றும் க்ராபண்டன் உள்ளிட்ட மாகாணத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுவிஸின் மத்திய போக்குவரத்து அலுவலகம், சுவிஸிலிருந்து இத்தாலி வரை செல்லும் உலகின் மிகப்பெரிய சுரங்கப்பாதையான கோத்தார்ட் சுரங்கபாதை விடுமுறை நாட்களில் நெரிசலுடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், யூலை மாதத்தில் அனைத்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 16.9 கி.மீ நீளம் உள்ள இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தும் அனைவரும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த வார இறுதியில் கோடைகால இசை நிகழ்ச்சிகளான ஒபன் ஆர் பெஸ்டிவல், செயிண்ட் கேலன், தீ ட்ரகர், இண்டர்லெகன் மற்றும் ஏராளமான நிகழ்ச்சிகள் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக