ஞாயிறு, 29 ஜூன், 2014

குடித்து விட்டு கார் ஓட்டியதில் நேர்ந்த விபத்து

சுவிட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் குடித்து விட்டு கார் ஓட்டியதில் ஏற்பட்ட விபத்தில் மூன்று நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
சுவிஸின் சர்மன்ஸ்டோர்ஃப் நகரில் 21 வயது நபர் ஒருவர் குடித்துவிட்டு மூன்று நபர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பாறை ஒன்றின் மீது மோதி கார் கவுந்துள்ளது.
இதனை அடுத்து அந்த மூன்று நபர்களும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். காரின் ஓட்டுநர் விபத்து பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
விபத்துக்கு காரணம் மது அருந்திவிட்டு காரை வேகமாக ஓட்டியதே காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக