திங்கள், 28 ஏப்ரல், 2014

சுவிஸில் முதலைக்கறியை கடத்திய பிரெஞ்சுக்காரர்கள்

சுவிஸ் நாட்டில் வாழும் பிரெஞ்சுக்காரர்கள் முதலைக் கறியை கடத்துகையில் பிடிபட்டுள்ளனர்.
பேசல் மாகாண கடற்கரையில், 16 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்டுள்ள மிருகங்களின் இறைச்சியுடன், பிரான்ஸிலிருந்து சுவிட்சர்லாந்திற்குக் கடத்திக் கொண்டு வருகையில், இந்தப் பிரெஞ்சுக்காரர் பிடிபட்டுள்ளனர்.
சுங்க இலாகா அதிகாரிகள் இவர்களின் வாகனத்தை சோதனையிட்டதில், காரின் பின் பகுதியில் ஒரு சூட்கேசில் உள்ள பிளாஸ்டிக் பைகளில் ஒரு பாம்பின் தலைப்பகுதியும், 9 துண்டுகளாக்கப்பட்ட முதலைக்கறி இறைச்சிகளும் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
விசாரணைக்குப் பிறகு, இந்த இறைச்சிகள் மத்திய மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டிலிருந்து கடத்தி வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனே சுங்க இலாகா அதிகாரிகள், இந்த மிருகங்களின் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.
மக்களின் உணவுப் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இந்த அபாயகரமான நச்சுத்தன்மை, நிறைந்த உணவு வகைகளை யாரும் தெரியாமல் உட்கொள்ளக் கூடாது என்ற காரணத்தினால், இதை சுகாதார நலன் கருதி அழித்து விட கட்டளையிடப்பட்டுள்ளது.
கேமரூனில் முன்பு வாழ்ந்தவர்கள், தற்போது சுவிட்சர்லாந்தில் குடிபுகுந்த போதிலும் ஆப்பிரிக்காவில் தாங்கள் சாப்பிட்ட மேற்கு ஆப்பிரிக்க, இவ்வகையான மிருக இறைச்சிகளை சாப்பிட விருப்பத்துடன் இந்த முதலைக்கறிகளையும், பாம்புக் கறிகளையும் கடத்தி வருவதாக விசாரணையில் சுங்க அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
 

சனி, 26 ஏப்ரல், 2014

நோயாளியின் தற்கொலைக்கு உதவி செய்த மருத்துவர்

 சுவிட்சர்லாந்தில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் தற்கொலைக்கு உதவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் மருத்துவமனை ஒன்றில் 89 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், இவரால் வலி தாங்க முடியாத காரணத்தால், தன்னை கொன்றுவிடுமாறு மருத்துவரிடம் வேண்டியுள்ளார்.
இவரின் வேண்டுகோளுக்கிணங்கிய மருத்துவரும் சுவிஸில் தற்கொலைக்கு பயன்படுத்தப்படும் சோடியம் பென்டோபார்பிடல் மருந்தினை அவருக்கு கொடுத்ததைத் தொடர்ந்து அந்த நோயாளி மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவரின் மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 500 பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

வங்கியின் இரகசிய கணக்குகளை குறிவைத்த அமெரிக்கா ?

 சுவிட்சர்லாந்திலுள்ள கிரெடிட் ஆசி வங்கியின் இரகசியக் கணக்குகளை அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டு நிறுவனம் கேட்டுள்ளது.
நியூயோர்க் வங்கிக்கட்டுப்பாட்டு நிறுவனம், கிரெடிட் ஆசியின் பங்கு விவகாரங்களில் ஏற்பட்டுள்ள வரி ஏய்ப்பினைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்யும் நோக்கத்துடன், கிரெடிட் ஆசியின் முக்கிய ஆவணங்களை உடனே சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, Benjamin lawsky என்ற நியூயோர்க் வங்கிக் கட்டுப்பாட்டு மேலதிகாரி, நிதி சேவையைக் கண்காணிக்கும் வகையில், கிரெடிட் ஆசி வங்கியின் பயணப் பதிவுகள் செலவு செய்ததற்காக பதிவுகள், திகதியின் படியுள்ள கலெண்டர் ஆவணங்கள் போன்றவற்றை சோதனையிட்டுள்ளார்.
Benjamin lawsky என்ற அமெரிக்க வங்கிக் கட்டுப்பாட்டு மேலதிகாரி கிரெடிட் ஆசி வங்கியிடமிருந்து, 22000 அமெரிக்க பங்குதாரர்களின் பங்கு ஆவணங்கள் ( 12 பில்லியன் டொலர்கள் பெறுமானமுள்ள பங்குகள்) கேட்டுள்ளார்.
ஆனால் கிரெடிட் ஆசி வங்கி இதுவரை ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை. ஆகவே கிரெடிட் ஆசி வங்கி 780 மில்லியன் டொலர்களை அமெரிக்க வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய காலகட்டத்தில் உள்ளது.
 

பெண்: உண்மையை உலகுக்கு அறிவித்த சாம்பியன்

பனிச்சறுக்கு சாம்பியனான சைல்வியான் தான் ஒரு ஓரினச்சேர்க்கை பெண் என்பதை உலகுக்கு அறிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு பனிச்சறுக்கு போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற சைல்வியானுக்கு தற்போது 37 வயது.
கடந்த 12 வருடங்களாக, இவர் பனிச்சறுக்கு போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர் தனது பேஸ்புக் பகுதியில் தான் ஒரு ஓரினச் சேர்க்கைப் பெண் என்றும், Laetitia என்ற மற்றுமொரு பெண்ணை மணம் முடிக்கப்போவதாகவும் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
அவர் மணக்கப்போகும், Laetitia என்ற அந்தப் பெண், லுசேனில் உள்ள மருத்துவமனையில் Anaesthetist ஆக ( உணர்வு இழப்பு மருந்து கொடுக்கும் நரம்பியல் மருத்துவராக) பணியாற்றி வருகின்றார்.
சைல்வின் தந்தையும், அண்ணனும் இந்த ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
 

புதன், 16 ஏப்ரல், 2014

பேருந்து விபத்தை மீண்டும் விசாரிக்க முடிவு

சுவிட்சர்லாந்தில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த பேருந்து விபத்து தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி Sierre and Sion நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த 22 குழந்தைகள் உட்பட 28 பேர் மரணம் அடைந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய குழுவினர், பேருந்து ஓட்டுநரின் உடல்நலம் சரியில்லாததால் ஏற்பட்ட கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரிவித்தது.
இந்நிலையில் விசாரணையின் முடிவில் திருப்தியடையாத பெற்றோர்கள், மீண்டும் விசாரணை நடத்தக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே இறந்து போன தனது கணவரின் மீது குற்றம் சுமத்துவது வேதனை அளிப்பதாக உள்ளது என ஓட்டுநரின் மனைவி தெரிவித்துள்ளார்.

திங்கள், 14 ஏப்ரல், 2014

வீடுகள் பற்றாக்குறையை சமாளிக்க அரசின் திட்டம்

சுவிசின் ஜெனிவா நகரத்தில் ரயில் மற்றும் தொழிற்சாலை நிலங்களை மாற்றி 11,000 குடியிருப்பு கட்டிடங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
ஜெனிவாவில் உள்ள PAV பகுதியில் 230 ஹெக்டேர் மண்டலத்தை குடியிருப்பு கட்டிடங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் வீடுகள் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமென கருதப்படுகிறது.
ஒரு பெரிய மைய பூங்கா, கார் பயன்பாட்டை குறைக்கும் வகையில் போக்குவரத்து வசதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்று 21 கொள்கைகளை மையமாக கொண்டு இக்குடியிருப்புகள் அமைய உள்ளது.
இதுதவிர புது பேருந்து தடங்கள் மற்றும் ரயில் நிலையங்களும் அடங்கும்.
இதில் தீ ஃபிர்ம்ஸ் டிசைன்ஸ் என்ற நிறுவனம் 1500 பொது வீட்டு திட்டங்கள், ஒரு பள்ளி, மற்றும் ஒரு வர்த்தக மையம் அமைக்கும் திட்டத்தை பொறுப்பு எடுத்துள்ளது.
 

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மாணவன் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சிறுவனின் மரணம் தொடர்பான விவகாரத்தில் மர்மம் நீடித்துக் கொண்டே செல்கிறது.
லுசேன் உள்ள மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் இத்தாலி நாட்டின் வாடிகன் நகரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது மாணவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த விருந்தினர் மாளிகையில், மாணவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்துள்ளான்.
இந்த சம்பவமானது, மாணவர்களுக்கிடையில் கத்தியை வைத்து விளையாடிக் கொண்டிந்த போது நடந்திருப்பதாக இத்தாலி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளதால், உண்மையான காரணங்கள் எதுவும் தெரியவில்லை.
மேலும் பிரேத பரிசோதனையில், கத்தி மார்பில் குத்தப்பட்டதும், தலையில் காயம் எற்பட்டதும் தெரியவந்துள்ளது.
இது மாணவர்களுக்கு இடையில் விளையாடிக் கொண்டுடிருந்த போது நடந்த விபத்தா, இல்லை திட்டமிட்ட படுகொலையா என்பது மர்மாகவே உள்ளது
 

வியாழன், 10 ஏப்ரல், 2014

முன்னேற்றத்தின் பாதையில் சுவிஸ்

சுவிசில் வேலையின்மை விகிதம் முதன்முறையாக குறைந்துள்ளது என புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிசில் நேற்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின் படி, 1.42.846 பேர்கள் வேலைக்காக பதிவு செய்திருந்ததில் 6,413 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
இதில் சுவிசில் பணிபுரியும் வெளிநாட்டவரின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 6.9 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் சுவிசில் வசிக்கும் மக்களுக்காக மொத்தம் 14,741 வேலைவாய்ப்புகள், அந்நாட்டு அரசாங்கத்தால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதால், எல்லா பகுதிகளிலும் வேலையின்மை பிரச்சனை குறைந்துள்ளது.
இந்நிலையில் சுவிசில் கடந்த 9 மாத காலத்தில் 3.3 சதவீதமாக வேலையின்மை குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
 

2கட்டிய மனைவியை எமலோகம் அனுப்பிய தாத்தா

சுவிசில் முதியவர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசின் உரி மாகாணத்தில் வசிக்கும் 69 வயது நிரம்பிய முதியவர் தனது மனைவி (65) நோய்வாய்ப்பட்டு இருந்தபோது தொண்டையில் கத்தியால் குத்தியுள்ளார்.
இவரது இச்செயல் பிரேத பரிசோதனையில் உறுதியானது. இதுகுறித்து நடைபெற்ற வழக்கில் இவரிடம் கேள்வி கேட்கையில், பதிலேதும் அளிக்காமல் இருந்துள்ளார்.
எனவே இவர் தற்கொலைக்கு முயற்சிக்க வாய்ப்புகள் இருப்பதால் வழக்கை தள்ளிவைக்குமாறு வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.
தற்போது மனநல சிகிச்சை பெற்று வரும் இம்முதியவரிடம் சிகிச்சை முடிந்ததும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
 

புதன், 9 ஏப்ரல், 2014

சுவிசில் மனைவி மீது குண்டு வீசிய கணவன்

 மனைவி மீது குண்டு வீசிய கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசின் ஆர்கு மாகாணத்தில் உள்ள போஸ்னிய நாட்டை சேர்ந்த 55 வயது நிரம்பிய நபர் கடந்த 6ம் திகதி தனது மனைவி (59) மீது குண்டு வீசியுள்ளான்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணின் வயிற்றில் குண்டு வெடித்து சிதறிய பொருட்களை, பார்த்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை அளித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார், நேற்று அப்பெண்ணின் கணவரை இத்தாலிய நாடு எல்லைப்பகுதியில் மடக்கி பிடித்துள்ளனர்.
இதுகுறித்து இந்நபரிடம் நடத்திய விசாரணையில், இக்குண்டு யூகோஸ்லாவியாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
எனினும் எந்த காரணத்திற்காக இந்த கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியது என்பது தெரியாததால் பொலிசார் இந்நபரிடம் தொடந்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.


செவ்வாய், 8 ஏப்ரல், 2014

எல்லையில்லாமல் போகும் கரடியின் அட்டகாசம்

சுவிசின் உயிரியல் பூங்காவில் தந்தை கரடி மீண்டும் மற்றொரு குட்டியை கொன்றது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள உயிரியல் பூங்காவில் மிஷா, மாஷி கரடிகளுக்கு கடந்த ஜனவரி 15ம் திகதி இரண்டு ஆண் கரடி குட்டிகள் பிறந்தது.
இதில் தந்தை கரடியான மிஷா கடந்த 3ம் திகதியில் தனது குட்டியை தூக்கி போட்டு விளையாடி கொண்டிருக்கையில் எதிர்பாரதவிதமாக அக்குட்டி கிழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்நிலையில் நேற்று மற்றொரு கரடி குட்டியையும், தந்தை கரடி அதேபோல் விளையாடி கொன்றுள்ளது.
இதனால் பூங்காவின் மேலாளர்கள் வனவிலங்கு துறையினர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து வனவிலங்கு அதிகாரிகள் கூறுகையில், முதலில் இக்கரடி தனது குட்டியை கொன்ற போதே பூங்காவின் மேலாளர்கள் அதனை தனிமைப்படுத்திருக்க ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்றும் அவர்களது அலட்சியமே இந்த இரண்டாம் கரடி குட்டியின் உயிரிழப்பிற்கு வழிவகுத்துள்ளது எனவும் கடுமையாக கூறியுள்ளனர்.
மேலும் பெர்ன் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கான போதிய வசதிகள் ஒன்றும் இல்லை என வனவிலங்கு துறையினர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

வழிகாட்டியை பலிவாங்கிய பனிப்பிளவு

சுவிசில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வழிகாட்டி ஒருவர் பனிப்பாறைபிளவினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுவிசின் வாலிஸ் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் 2 சுற்றுலா பயணிகளுடன் சென்ற வழிகாட்டும் நபர் ஒருவர் ஆல்ப்ஸ் மலை ஏற முயன்றுள்ளார்.
அப்போது நேர்ந்த பனிப்பாறை பிளவினால் சுமார் 20 மீற்றர் உயரத்திலிருந்து எதிர்பாரவிதமாய் கிழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இவரை மீட்டு செல்வதற்கு முன்பே, இவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டில் இதுபோல் வழிகாட்டி இறக்கும் சம்பவம் மூன்றாவது முறையாக நடப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல் 28 வயது மிக்க மலைப்பகுதி வழிகாட்டி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் பனிச்சரிவினால் இறந்தது குறிப்பிடதக்கது.