வியாழன், 10 ஏப்ரல், 2014

2கட்டிய மனைவியை எமலோகம் அனுப்பிய தாத்தா

சுவிசில் முதியவர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசின் உரி மாகாணத்தில் வசிக்கும் 69 வயது நிரம்பிய முதியவர் தனது மனைவி (65) நோய்வாய்ப்பட்டு இருந்தபோது தொண்டையில் கத்தியால் குத்தியுள்ளார்.
இவரது இச்செயல் பிரேத பரிசோதனையில் உறுதியானது. இதுகுறித்து நடைபெற்ற வழக்கில் இவரிடம் கேள்வி கேட்கையில், பதிலேதும் அளிக்காமல் இருந்துள்ளார்.
எனவே இவர் தற்கொலைக்கு முயற்சிக்க வாய்ப்புகள் இருப்பதால் வழக்கை தள்ளிவைக்குமாறு வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.
தற்போது மனநல சிகிச்சை பெற்று வரும் இம்முதியவரிடம் சிகிச்சை முடிந்ததும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக