சுவிட்சர்லாந்தில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் தற்கொலைக்கு உதவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் மருத்துவமனை ஒன்றில் 89 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சுவிஸின் மருத்துவமனை ஒன்றில் 89 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், இவரால் வலி தாங்க முடியாத காரணத்தால், தன்னை கொன்றுவிடுமாறு மருத்துவரிடம் வேண்டியுள்ளார்.
இவரின் வேண்டுகோளுக்கிணங்கிய மருத்துவரும் சுவிஸில் தற்கொலைக்கு பயன்படுத்தப்படும் சோடியம் பென்டோபார்பிடல் மருந்தினை அவருக்கு கொடுத்ததைத் தொடர்ந்து அந்த நோயாளி மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவரின் மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 500 பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக