ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சுவிசை சேர்ந்த நபர் மெக்சிகோவில் மீட்பு

 சுவிசை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க நபர் மெக்சிகோவில் உள்ள பூங்கா ஒன்றில் மீட்கப்பட்டுள்ளார்.
சுவிசை சேர்ந்த Max Saeff(வயது 80) என்பவர் மெக்சிகோவில் உள்ள Volcano National Park-ல் கடந்த 20ம் திகதி காலை மீட்கப்பட்டுள்ளார்

உடல் சோர்வாக, வலிமை இழந்து காணப்பட்டார் எனவும், தலையில் காயங்கள் இருந்தது என்றும் அருகில் வசிக்கும் நகரத்தின் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பூங்காவில் நுழைவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது 18ம் திகதி தான் இவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது
 

புதன், 18 டிசம்பர், 2013

ரயில் மோதிசுவிட்சர்லாந்தில் இரு சகோதரிகள் பலி

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இரு சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.
சுவிஸ் தலைநகர் பெர்ன் இரயில் நிலையத்தில் எதிர்பாரதவிதமாய் இந்த விபத்தானது நடந்துள்ளது.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இச்சகோதரிகள் 33 மற்றும் 32 வயது நிரம்பியவர்கள், ஜெசிவா செயிண்ட் கேலன் என்ற இரயில் பேர்ன் அருகில் வந்தபோது ஓட்டுனரால் எவ்வளவு முயன்றும் இரயிலை நிறுத்த இயலாததால் இவ்விறுவரின் மீது மோதியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவ்விருவரின் சடலங்கள் இரயில் நிலையத்தின் அருகே இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தில் அவசர மீட்பு பணி தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் இச்சம்பத்தினால் ஜெசிவா செயிண்ட் கேலன் ரயிலில் பயணித்த பல்லாயிரக் கணக்கான பயணிகள் வேறு இரயிலுக்கு மாற்றப்பட்டனர் மற்றும் உள்ளூர் இரயில்கள் ரத்துசெய்யப்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் ஏதும் தெளிவாகவில்லை என்பதால் தீவிர விசாரணையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர் மற்றும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் 031-634-41-11 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
 

சுவிஸில் வெற்றிக்கனியை பறித்த பிரான்ஸ் வீராங்கனை(காணோளி)

 சுவிஸில் நடைபெற்ற பெண்களுக்கான பனிச்சறுக்கு விளையாட்டு போட்டியில் பிரெஞ்சு விளையாட்டு வீராங்கனை ”டெஸ்லா ஒர்லி” முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2010 முதல் 2013 வரை ”டெஸ்லா ஒர்லி” இவ்விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து ஸ்வீடனை சேர்ந்த ஜெசிக்கா இரண்டாம் இடத்தையும்,ஸ்லோவேனியாவை சேர்ந்த டினா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஆனால் சுவிஸை சேர்ந்த சுவிஸ் சாம்பியன் என்ற “லாரா கத்” எதிர்பாராவிதமாக தோல்வியுற்றார்.
மேலும் பிரெஞ்சு விளையாட்டு வீராங்கனை இவ்வெற்றியை எட்டாவது முறை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

செவ்வாய், 17 டிசம்பர், 2013

சுவிஸில் சட்டவிரோதமான முறையில் கலைப்பொருட்கள்

சுவிசின் சுரஜ் மாகாணத்தில் உள்ள ஆடம்பர ஹொட்டல் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கலைப்பொருட்கள் சிக்கியுள்ளது.
சுரஜின் டோல்டர் கிராண்டு என்ற ஆடம்பர ஹொட்டலில் சுங்க அலுவலக அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அதில் சுவார்சன்பா என்ற நிதியாளர் சட்டவிரோதமாக பல கலைப்பொருட்களை இறக்குமதி செய்துள்ளனர்.
மேலும் இங்கிலாந்தில் வசித்து வரும் இவரின் சொத்துகளின் மதிப்பு மட்டும் 2.75 மில்லியன் என தகவல் வெளியானது.
இதுகுறித்து பிரிட்டிஷ் ஊடகங்களின் வந்த செய்திகளில், இவர் இளவரசர் சார்லசுடன் போலோ விளையாட்டு ஆடும் போது நெருங்கிய நண்பர் ஆனார் என்றும் இங்கிலாந்தில் உள்ள பொலோ கிராமம் ஒன்றை 64 மில்லியன் டொலருக்கு வாங்கிய செல்வந்தர் எனவும் தகவல் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 

வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கித் திணரும் சுவிஸ்

 வேலையில்லா திண்டாத்தினால் சுவிஸ் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது என சுவிசின் அரசாங்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில் 139,073 பேர் வேலையின்மை நலன்களுக்காக பதிவு செய்து விண்ணப்பித்துள்ளனர்.
1.96,522 பேர் வேலைக்கென பதிவு செய்துள்ளனர். மேலும் சுவிசின் அதிகளவில் வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் இடமாக திகழ்வது ஜெனிவா மாநகரம்.
இவ்வதியில் தப்பித்த ஒரு பகுதி சூரிச் பகுதியாகும். ஏனெனில் இங்கு பிற நாட்டு மக்களும் இணைந்துள்ளதால் ஓரளவுக்கு வேலைவாய்ப்பு உள்ள பகுதியாக திகழ்கிறது.
 

சுரங்கப்பாதையில் பயணித்த நபருக்கு தண்டனை

சுவிட்சர்லாந்தில் பொதுமக்களுக்கு இன்னும் திறந்து விடப்படாத சுரங்கப்பாதையின் வழியாக காரை ஓட்டிக் கொண்டுபோன நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை இன்னும் ஒரிரு நாட்களில் திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில் 50 வயதான வாகன ஓட்டுனர் ஒருவர் இந்த சுரங்கப்பாதையில் குடித்துவிட்டு கார் ஓட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய பொலிசார் அவரது வாகன உரிமையை இடைக்கால ரத்து செய்துள்ளனர்
 

திங்கள், 9 டிசம்பர், 2013

பகலிலும் ‘ஹெட்லைட்’ அவசியம்: அதிரடி சட்டம்

சுவிஸ் நாட்டில் பகல் நேரங்களிலும் கார்களில் ஹெட்லைட் தேவை என்ற புதிய சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜனவரி 2014 முதல் இந்த சட்டத்தை அமலுக்கு வரவுள்ளது.
இவ்வாறு செய்வதால் வாகன ஓட்டிகள் தீவிர விபத்தை தவிர்க்கலாம் என்ற நோக்கத்தில் போக்குவரத்து துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும் இரவு நேரங்களில்,சுரங்க பாதையிலும், மேம்பாலத்திலும் ”ஹெட்லைட்” களை கட்டயாமாக வாகன ஓட்டிகள் போட்டுக் கொண்டு ஓட்ட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

குறைந்தபட்ச ஊழல் செய்யும் சுவிஸ்


உலகின் மிக குறைவான ஊழல் மிக்க நாடுகள் சுவிஸ் 7வது இடத்தை பிடித்துள்ளது.
உலகில் ஊழல் மிக்க நாடுகள் மற்றும் ஊழல் குறைவான நாடுகள் எவை என்பதை அறிய “டிரான்ஸ்போன்சி இன்டர் நேஷனல்” அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இதில் சுவிஸ் 7ம் இடத்தை பிடித்ததையறிந்த அந்நாட்டு அரசாங்கம் பெருமிதமடைந்துள்ளது.
மேலும் உலகின் ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் டென்மாக் முதலிடத்தையும்,நியூசிலாந்து

இரண்டாமிடதையும், பின்லாந்த் மூன்றாமிடத்தையும்,ஸ்வீடன் நான்காம் இடத்தையும்,நார்வே ஐந்தாம் இடத்தையும், சிங்கப்பூர் ஆறாம் இடத்தையும் மற்றும் சுவிஸ் ஏழாம் இடத்தையும் பிடித்துள்ளது.
 

முகவரியுடன் குப்பையை போட்ட நபர்

சுவிட்சர்லாந்தில் பிளாஸ்டிக்கை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு 2 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸின் வாயூத் பகுதியில் மறுசுழற்சி விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.
இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பெட்ரிக் டியூபோர்(57) என்பவர் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் அவரின் முகவரியுடன் கூடிய கவர்கள் மற்றும் காகிதங்கள் அடங்கிய பை ஒன்றினை குப்பை

தொட்டியில் போட இடமில்லாததால் மறுசுழற்ச்சிக்கு அனுப்ப வேண்டிய பையில் போட்டு விட்டார்.
இதையறிந்த பொது பணித்துறை அவரின் முகவரிக்கு தொடர்பு கொண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் 250 பிராங்குகள் அபராதம் செலுத்தவேண்டும் அல்லது 2 நாள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பெட்ரிக் டியூபோர் கூறுகையில், என்னுடைய பெயர், முகவரியை வேண்டுமென வெளிட நான் ஒன்றும் பைத்தியம் இல்லை என்றும் மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
 

வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்க முடியாது: !!

 சுவிட்சர்லாந்து வங்கிகளில் இனி கறுப்பு பணத்தை போட முடியாது என்று சுவிஸ் வங்கிகள் முடிவெடுத்துள்ளன.
காலம் காலமாக கறுப்பு பணத்தின் பாதுகாப்பு பெட்டகம் என்று பெயர் பெற்றது சுவிட்சர்லாந்து வங்கிகள்.

குறிப்பாக இந்தியாவில் இருந்து பலரும் வரி ஏய்ப்பு செய்த பணத்தை இந்த நாட்டு வங்கிகளில் தான் போட்டு வைத்துள்ளனர். இந்த பணம் பற்றி அவ்வப்போது சர்ச்சை கிளம்பும்.
நம் நாட்டில் இருந்து கறுப்பு பணம் இரண்டரை லட்சம் கோடி வரை சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு வாதம் இருக்கிறது. இன்னொரு பக்கம் வெறும் 75 ஆயிரம் கோடி தான் என்று இன்னொரு தரப்பில் கூறப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு சர்வதேச கூட்டமைப்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன் நடந்தது. அப்போது வங்கிகளில் பணம் போடும் வெளிநாட்டவர் பற்றிய நிர்வாக தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் குறித்து பேசப்பட்டது.
இந்த கூட்டமைப்பில் இந்தியா உட்பட 60 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் போடுவோர் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், வரி தொடர்பான விதிகளை அமல்படுத்தவும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதில் சுவிஸ், இந்தியா உட்பட 58 நாடுகள் கையெழுத்திட்டன.இந்த இரு நடவடிக்கைகளை தொடர்ந்து சுவிட்சர்லாந்து நாடு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எக்காரணம் கொண்டும் வரிஏய்ப்பு செய்த பணத்தை டெபாசிட் பெறக்கூடாது. மேலும் சுவிஸ் வங்கிகளில் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு பணத்தை வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மாற்ற அனுமதிக்க கூடாது என்று வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது.
அரசின் ஆலோசனையை தொடர்ந்து சுவிஸ் வங்கிகள் சங்கம் சமீபத்தில் கூடியது. இதில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

*இனி எக்காரணம் கொண்டும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து வரிஏய்ப்பு செய்த பணத்தை டெபாசிட் பெறமாட்டோம்.
*வங்கிகளுக்குள் இப்படிப்பட்ட சட்டவிரோத பணம் தொடர்பான கணக்குகளை மாற்றவும் அனுமதிக்க முடியாது.

*வரி ஏய்ப்பு செய்யும் வாடிக்கையாளர்கள் பற்றி சம்பந்தப்பட்ட நாடுகள் கேட்டால், அதிகாரப்பூர்வ அனுமதியுடன் தகவல்களை அரசு மூலம் அனுப்புவோம்.
*வங்கி கணக்கு தொடர்பான நிர்வாக தகவல்களை தருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்பட மாட்டாது.
*வரி கட்டிய பின் பணத்தை டெபாசிட் செய்யப்படுவதை வங்கிகள் உறுதி செய்யும்.
 

சனி, 30 நவம்பர், 2013

கார்ட்டூன் படங்களுடன் வேலை தேடும் விசித்திர நபர்

சுவிட்சர்லாந்தில் வாலிபர் ஒருவர் வேலை தேடும் நிறுவனங்களுக்கு தனது பயோடேட்டாவை கார்ட்டூன் படங்கள் போன்று அனுப்பி அவர்களை கவர்ந்துள்ளார்.

லூசேன் கேண்டனில் வசிப்பவர் டரிக்லாலா(29). இவர் தனது கல்வித்தகுதி மற்றும் வேலை அனுபவத்தை 12 கார்ட்டூன் படங்களாக கைப்பேசி மூலம் சித்தரித்து அதை தனது சான்றிதழ்களுடன் இணைத்து வேலைவாய்ப்ப்பு மையங்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதற்காக நான் இரண்டரை நாள் செலவிட்டேன். முதல் அரை நாளில் பயோடேட்டாவிற்கு ஏற்ற கார்டூன் படங்களை சேகரித்து கொண்டேன்.

பின்னர் அடுத்த அரைநாளில் அதை போட்டோஷாப் மூலம் டிசைன் செய்து அழகு படுத்தி,இறுதியில் அதை என் பயோடேட்டாவுடன் அனுப்பினேன் என்றும் இதை அனுப்பியபின் தினமும் ஒரு நேர்முகத் தேர்வு அழைப்பு கடிதம் எனக்கு வந்த வண்ணம் உள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
 

ரயில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பெண்

சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் குடித்துவிட்டு கார் ஓட்டுகையில் ரயிலின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

ஆப்டின்கன் மாநகராட்சியில் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இப்பெண்மணி தனது ஜிபிஎஸ் கைப்பேசியின் வழிகாட்டுதலின் படி தன்னுடைய வீட்டிற்கு வழி தேடி சென்றுள்ளார்.

அப்போது இவருடைய கார் ரயில்வே தண்டவாளங்களில் திடீரென சிக்கி கொண்டது. பின்னர் தன் காரை வெளியே எடுக்கையில் எதிரே வந்த ரயிலின் மீது மோதியது.

இந்த விபத்தில் காருக்கு ஏற்பட்ட சேதத்தினை சரிசெய்ய 20,000 பிராங்குகள் தேவைப்படும் என்றும் ஆனால் ரயிலுக்கு பெயிண்ட் மட்டுமே அடிக்க நேரிடும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்பெண்ணின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது..
http://navatkirinew.blogspot.ch/



வெள்ளி, 8 நவம்பர், 2013

பெண் பொலிஸ் அதிகாரி கார் விபத்தில் மரணம்


சுவிட்சர்லாந்தில் நடந்த கார் விபத்தில் பெண் பொலிசார் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

சுவிஸில் உள்ள லுசேன் பகுதியில் இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது.
சம்பவதினத்தன்று இரவு 9.15 மணியளவில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர், சாலையில் இறந்து கிடந்த நரியை அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அதிகாரி மீது, கார் மோதியதில் இரத்தக்காயங்களுடன் தூக்கிவிசப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், காரை ஓட்டிவந்த 79 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சனி, 26 அக்டோபர், 2013

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சம உரிமை


சுவிட்சர்லாந்தில் செயல்படும் கிரிடிட் சூசி (Credit Suisse) வங்கியில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
சுவிஸில் இயங்கி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு மற்றும் உறுப்பினர்கள் பட்டியலில்

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது குறைந்த அளவு வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டு இயங்கி வரும் இந்த வங்கியானது விரைவில் முதலீட்டு சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் தற்போது அமெரிக்காவில் மட்டுமே பல கிளைகளை கொண்ட இந்த வங்கி எதிர்காலத்தில் உலகளவில் ஏராளமான கிளைகளை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளது.

சனி, 21 செப்டம்பர், 2013

ஐ.நா முன்பாக தீக்குளித்த ஈழத்தமிழர் பரிதாப சாவு


சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை அலுவலகம் முன்பு செந்தில்குமரன் ரத்தினசிங்கம் எனும் ஈழத்தமிழர் தீக்குளித்து உயிரிழந்தார்.

அங்குள்ள மூன்று நாற்காலி சின்னத்துக்கு அருகில் வியாழனன்று அதிகாலை 1.10 மணிக்கு தனக்குத் தானே தீயிட்டுக்கொண்ட அவர், படுகாயம் அடைந்தார்.
அப்போது, அங்கு மாதக்கணக்கில் தொடர் போராட்டம் நடத்திக்கொண்டு இருந்த ஈரானியர்களின் உதவியுடன் உள்ளூர் பொலிசார், செந்தில்குமரனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், லௌசான் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி மாலை 4.15 மணிக்கு உயிரிழந்தார்.
சுவிசின் சியோன் பகுதியில் குடியிருந்துவந்த செந்தில்குமரனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அமைதியான சுபாவம் கொண்ட இவர், கடைசியாக, தந்தை ரத்தினசிங்கத்திடம் பேசியுள்ளார்.

அப்போது, தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம் என்று குறிப்பிட்டு இணைப்பைத் துண்டித்துக்கொண்டதாக அவர்களின் வீட்டருகில் வசிக்கும் சிவலோகனன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதே ஐநா முன்றலில், 2009 பிப்ரவரி 13ம் நாளன்று, ஈழப்போரைத் தடுக்கக்கோரி ஈழத்தமிழரான முருகதாஸ் தீக்குளித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
 

சமையல் நிபுணருக்கு கவுரவ டொக்டர் பட்டம்


பிரான்ஸ் நாட்டால் வழங்கப்படும் கவுரவ டொக்டர் செப் (chef honorary doctorate) விருதினை முதன்முறையாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் பெற்றுள்ளார்.

இந்த விருதானது 45 தொழில் நிபுணர்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சுவிஸ் நாட்டை சேர்ந்த பிலிப் ரோச்சட் (வயது 59) என்பவர் இந்த விருதினை பெற்றுள்ளார்.

வாயுத் என்னும் கிராமத்தில் உள்ள இவரது உணவகத்திற்கு மைக்கிலின் கையேடின்படி மூன்று ஸ்டார்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது உணவு, வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய கேஸ்ட்ரோனோமிக் துறையில் இவர் இந்த விருதினை பெற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 

விநாயகன வினை தீர்ப்பவனேபாடல்

                                                 

 
நாம் முதலில் வணங்கும் தெய்வம் விநாயகர் அவரின்புகழ் பாடும்ஓர் அற்புதப்பாடல் [காணொளிகள்]